Wednesday, December 11, 2013
பெண் குழந்தைகளின் ரிது பலன்
ருது வார பலன் விவரம்
பூப்பெய்துதல் என்னும் புனிதமானத் தமிழ்சொல்லை
வடமொழியில் ரிதுசோபனம்
என்பர். பொதுவாக பெண்
குழந்தைகளின் ரிது காலத் தின் பலன்கள் நாம் அறிந்து கொண்டிருக்க வேண்டியது மிகவும்
அவசியமாகும். ஒரு குழந்தை வாழ்க்கைப் பயணத்தின் முதல்
பத்துமாதங்களுக்கும், அவரவரின் தாயின்
கர்ப்பபை மற்றும் சினைப்பைகளின் பணிகள் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிவர். அதன் படி, அந்த பாக்கியத்தினைத் தருகின்ற முதல் முதல் நிகழ்ச்சியாகிய
ரிதுவாதலின் பலன்கள் சற்று அறிவோமா!..
வாரங்களில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி நாட்களில்
முறையே, பதிவிரதை, நல்ல சம்பத்துக்கள், பொருள் சேர்க்கை மற்றும் ஆரோக்கியம் எனப்
பலன் கொள்ளலாம். ஞாயிறு அன்று ருதுவானால்
புத்திர பாக்கியத் தடைகள் இருக்கும்.
செவ்வாய், சனி நாட்களில் ருதுவாதல் கெடுபலன்கள் தரும். அதற்கு உரிய எளிய பரிகாரங்கள் செய்து கொள்ள
உத்தமம்.
ருது வார பலன்கள்
போல ருது நட்சதிர மற்றும் ருது சமய பலன்கள் வரும் நாட்களில் எழுதுகிறோம்.
குறிப்பு: தற்போது நடைபெறும் கார்த்திகை, மார்கழி, மற்றும் தை மாதங்களில் பூப்படைதல் முன்பனி, பின்பனி காலங்களில் அதிகளவு நடைபெறும் என்பதால், உரியவர்கள் அக்காலத்தைக் கணித்து நடப்பது சிறந்தது.
JOTHIDA THAMBATHI.
Monday, December 2, 2013
கனவுகளின் பலன்கள் என்ன! DREMS PREDICTIONS
கனவுகளின் பலன்கள்
என்ன!
DREMS
PREDICTIONS
மனிதனின் வேகமான கால ஓட்டத்தில் தத்தளிக்கும் சிறியவர் முதல்
பெரியவர் வரையிலான உள்ளங்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளத்தக்க வகையில்
அவர்களுக்கு தன்னந்தனியாக கொடுக்கின்ற ஆலோசனையின் ஒரு பகுதி கனவாகக் கொள்ளலாம்
என்பதில் உடன்பாடு உள்ளதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும்.
வாழ்க்கையில்
ஒரு தடவை உணர்ந்திராத, பார்த்திராத, கேட்டிராத பல்வேறு நிகழ்வுகள் கனவில் மட்டும்
எப்படித் தோன்றுகின்றன என வியந்து கூறுவோர் பலர் உளதாயினும், கனவைக் கண்டு பயந்து
அஞ்சி அப்படி நடந்து விடுமோ.. இப்படி நடந்துவிடுமோ!.. என அதிர்ச்சியுடன் நடுஇரவில்
கூட கைபேசியில் அழைத்து கேட்கும் வாடிக்கயாளர்கள் பலரின் அனுபவம் எங்களுக்கு
உள்ளது.. சொன்னது போலவே, கேட்டது போலவே இந்த கனவுக்கு இந்த பலன் என்று சொல்லும்
படியாக அமைந்துள்ள முன்மாதிரிகள் ஏராளம்..
(முக்கியமாக கனவுகளில் வந்த செயல்கள் அப்படியே வாழ்க்கையில்
நடந்த அனுபவங்கள் அவ்வளவாக இல்லை.. பின் எப்படி கனவுகள் – எந்த மாதிரியான
விளைவுகளைத் தந்துள்ளன என காலம் காலமாக கணித்த விவரங்கள் கீழே காண்போம்..!..)
தங்களுக்கு நிகழ்ந்த கனவுகளின் பலன்கள் அறிய வேண்டுமா.. 9443423897 க்கு
அழையுங்களேன்..நன்றி.!.
கனவுகளில் கீழ்க்கண்ட விதத்தில் வந்தால் நல்லது நடக்கும் என
அறிவோம்!.
வானில் சஞ்சாரம்
செய்வது போன்ற நிகழ்வு
நதியின் அருகில்
அல்லது நதியில் உள்ளது போல நிகழ்வு
கடலின் அருகில்
அல்லது கடலில் உள்ளது போல நிகழ்வு
சூரியனைப்
பார்ப்பது, சூரிய நமஸ்காரம் ஆகிய நிகழ்வு
அக்னி
ஜூவாலையில் ஒளிர்வது போன்ற நிகழ்வு
கிரகங்கள்,
நட்சத்திரங்கள் பார்ப்பது போன்ற நிகழ்வு
உணவு வழங்குவது
போன்ற நிகழ்வுகள் கனவில் கண்டால் நிச்சயமாக நல்ல பலன்கள் கிட்டும்.
ஆனால், இதையும்
தாண்டி, மது அருந்துதல், மாமிசம் சாப்பிடுதல், இரத்த அபிஷேகம் செய்தல், தயிர்
சாப்பிடுதல், வெள்ளை உடை உடுத்துதல், ஆபரணங்கள் முக்கியமாக வைர ரத்தின ஆபரணங்கள்
அணிதல் போன்ற நிகழ்வுகளைக் கனவில் கண்டால் மிகுந்த புகழ் கீர்த்தி வந்து சேரும்.
உயர்குடி மக்கள், தேவதைகள், பட்சிகள், குடை, உமி,
தாமரைப்பூ, ரோஜா, வெள்ளைப் பூக்கள், ஆபரணங்கள் உடலெங்கும் அணிந்த பெண், காளை, மலை,
பால், பழமுள்ள மரங்கள், கண்ணாடி, மாமிசம், நீர்நிலைத் தொட்டி ஆகியவை கனவில்
கண்டால் வியாதியால் பலஹீனமாவார்கள்.
தாய்,தந்தை பெண், கொக்கு, கோழி, மான் இவைகளைக் கண்டால் சுப
பலன்கள் வந்தடையும்,,
அசுப பலன்கள் தரும் கனவுகளில்
வருகின்ற ஒருசில நிகழ்வுகள் பின்வருமாறு
எட்டிமரம், புத்து, மொட்டை மரமேறுவது போல, எண்ணை, பருத்தி, இரும்பு,கழுகு, குரங்கு, நல்லபாம்பு, கழுதை, குறையுள்ள தலை, இரத்த ஆடை அணிதல், விளையாடுதல் இவைகளைக்கண்டால் துன்பங்கள் வந்து சேரும்.
எட்டிமரம், புத்து, மொட்டை மரமேறுவது போல, எண்ணை, பருத்தி, இரும்பு,கழுகு, குரங்கு, நல்லபாம்பு, கழுதை, குறையுள்ள தலை, இரத்த ஆடை அணிதல், விளையாடுதல் இவைகளைக்கண்டால் துன்பங்கள் வந்து சேரும்.
வெள்ளைப் பொருட்களில், பருத்தி,சாம்பல்,
அன்னம், மோர் இவைகளைத் தவிர மற்றது நல்லது. கறுப்பு பொருட்களில், பிராமணர்,
தேவர்கள், குதிரை, பசு, யானை இவைகளைத் தவிர அசுப பலன்கள் தரும் எனவும்
கூறப்பட்டுள்ளது,
இக்கனவுகள், முதல் சாமத்தில் கண்டால்,
ஒருவருடத்திற்குள்ளாகவும், இரண்டாவது சாமத்தில் கண்டால், எட்டு மாத்த்திற்குள்ளகாவும்,
3வது சாம்மாயிருந்தால், 3 மாத்த்திற்குள்ளகாவும், 4வது சமாத்தில் கண்டால் ஒரு
மாத்த்திற்குளாகவும், அருணோதயமாயிருந்தால், பத்து தினங்களுக்குள்ளகாவும், சூரிய
உதய காலமாயிருந்தால், அந்த கணத்திலும் பலன் அடைவர்.
இவற்றும்
தோஷமுண்டான பலன்களுக்கு பரிகாரங்கள் பார்த்து செய்தால் தோஷம் நீங்கும். சுபிட்சம்
கிட்டும். சுபம்.
ஜோதிட தம்பதி
ரெங்கன் – உஷா.
IMRPOVE THE EDUCATION AND CONFIDENT AND INTELLIGENT கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க
கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க
கலைமகளுக்கு குரு ஹயக்ரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். திருமாலின் உருவங்களில் ஒன்றாக விளங்குபவர். கல்வியில் சிறப்படைய இந்த சுலோகத்தைத் தினமும் காலை, மாலை கூறி வந்தால் நல்ல கல்வி கிடைக்கும்.
ஹயக்ரீவர் மூலமந்திரம்
உத்கீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோசிந்த்ய
ஸர்வம் போதய போதய
ஹயக்ரீவர் காயத்ரீ
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்
ஹயக்ரீவர் தியான ஸ்லோகம்
1. ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே
2. சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சதுர்புஜம் சம்பூர்ணம்
சந்த்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே
சரஸ்வதி காயத்ரீ
ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்
ஓம் வாக் தேவீ ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்
சரஸ்வதி தியான ஸ்லோகம்
1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை
3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்
4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன
5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்
6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம
7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா
8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே
9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே
10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்
Subscribe to:
Posts (Atom)