Monday, December 2, 2013

கனவுகளின் பலன்கள் என்ன! DREMS PREDICTIONS

கனவுகளின் பலன்கள் என்ன!
DREMS PREDICTIONS
மனிதனின் வேகமான கால ஓட்டத்தில் தத்தளிக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரையிலான உள்ளங்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அவர்களுக்கு தன்னந்தனியாக கொடுக்கின்ற ஆலோசனையின் ஒரு பகுதி கனவாகக் கொள்ளலாம் என்பதில் உடன்பாடு உள்ளதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும்.
வாழ்க்கையில் ஒரு தடவை உணர்ந்திராத, பார்த்திராத, கேட்டிராத பல்வேறு நிகழ்வுகள் கனவில் மட்டும் எப்படித் தோன்றுகின்றன என வியந்து கூறுவோர் பலர் உளதாயினும், கனவைக் கண்டு பயந்து அஞ்சி அப்படி நடந்து விடுமோ.. இப்படி நடந்துவிடுமோ!.. என அதிர்ச்சியுடன் நடுஇரவில் கூட கைபேசியில் அழைத்து கேட்கும் வாடிக்கயாளர்கள் பலரின் அனுபவம் எங்களுக்கு உள்ளது.. சொன்னது போலவே, கேட்டது போலவே இந்த கனவுக்கு இந்த பலன் என்று சொல்லும் படியாக அமைந்துள்ள முன்மாதிரிகள் ஏராளம்..
(முக்கியமாக கனவுகளில் வந்த செயல்கள் அப்படியே வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் அவ்வளவாக இல்லை.. பின் எப்படி கனவுகள் – எந்த மாதிரியான விளைவுகளைத் தந்துள்ளன என காலம் காலமாக கணித்த விவரங்கள் கீழே காண்போம்..!..)
தங்களுக்கு நிகழ்ந்த கனவுகளின் பலன்கள் அறிய வேண்டுமா.. 9443423897 க்கு அழையுங்களேன்..நன்றி.!.
கனவுகளில் கீழ்க்கண்ட விதத்தில் வந்தால் நல்லது நடக்கும் என அறிவோம்!.

வானில் சஞ்சாரம் செய்வது போன்ற நிகழ்வு
நதியின் அருகில் அல்லது நதியில் உள்ளது போல நிகழ்வு
கடலின் அருகில் அல்லது கடலில் உள்ளது போல நிகழ்வு
சூரியனைப் பார்ப்பது, சூரிய நமஸ்காரம் ஆகிய நிகழ்வு
அக்னி ஜூவாலையில் ஒளிர்வது போன்ற நிகழ்வு
கிரகங்கள், நட்சத்திரங்கள் பார்ப்பது போன்ற நிகழ்வு
உணவு வழங்குவது போன்ற நிகழ்வுகள் கனவில் கண்டால் நிச்சயமாக நல்ல பலன்கள் கிட்டும்.
ஆனால், இதையும் தாண்டி, மது அருந்துதல், மாமிசம் சாப்பிடுதல், இரத்த அபிஷேகம் செய்தல், தயிர் சாப்பிடுதல், வெள்ளை உடை உடுத்துதல், ஆபரணங்கள் முக்கியமாக வைர ரத்தின ஆபரணங்கள் அணிதல் போன்ற நிகழ்வுகளைக் கனவில் கண்டால் மிகுந்த புகழ் கீர்த்தி வந்து சேரும்.
உயர்குடி மக்கள், தேவதைகள், பட்சிகள், குடை, உமி, தாமரைப்பூ, ரோஜா, வெள்ளைப் பூக்கள், ஆபரணங்கள் உடலெங்கும் அணிந்த பெண், காளை, மலை, பால், பழமுள்ள மரங்கள், கண்ணாடி, மாமிசம், நீர்நிலைத் தொட்டி ஆகியவை கனவில் கண்டால் வியாதியால் பலஹீனமாவார்கள். 
தாய்,தந்தை பெண், கொக்கு, கோழி, மான் இவைகளைக் கண்டால் சுப பலன்கள் வந்தடையும்,,
அசுப பலன்கள் தரும் கனவுகளில் வருகின்ற ஒருசில நிகழ்வுகள் பின்வருமாறு
 எட்டிமரம், புத்து, மொட்டை மரமேறுவது போல, எண்ணை, பருத்தி, இரும்பு,கழுகு, குரங்கு, நல்லபாம்பு, கழுதை, குறையுள்ள தலை, இரத்த ஆடை அணிதல், விளையாடுதல் இவைகளைக்கண்டால் துன்பங்கள் வந்து சேரும்.
வெள்ளைப் பொருட்களில், பருத்தி,சாம்பல், அன்னம், மோர் இவைகளைத் தவிர மற்றது நல்லது. கறுப்பு பொருட்களில், பிராமணர், தேவர்கள், குதிரை, பசு, யானை இவைகளைத் தவிர அசுப பலன்கள் தரும் எனவும் கூறப்பட்டுள்ளது, 
இக்கனவுகள், முதல் சாமத்தில் கண்டால், ஒருவருடத்திற்குள்ளாகவும், இரண்டாவது சாமத்தில் கண்டால், எட்டு மாத்த்திற்குள்ளகாவும், 3வது சாம்மாயிருந்தால், 3 மாத்த்திற்குள்ளகாவும், 4வது சமாத்தில் கண்டால் ஒரு மாத்த்திற்குளாகவும், அருணோதயமாயிருந்தால், பத்து தினங்களுக்குள்ளகாவும், சூரிய உதய காலமாயிருந்தால், அந்த கணத்திலும் பலன் அடைவர். 
இவற்றும் தோஷமுண்டான பலன்களுக்கு பரிகாரங்கள் பார்த்து செய்தால் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். சுபம்.
ஜோதிட தம்பதி

ரெங்கன் – உஷா.

3 comments:

Unknown said...

பால் பொங்கி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

அழகிய நன்மை said...

நற்பலன் உண்டாகும் .......

Unknown said...

ஒரு மலை போல் உள்ள ஒரு பாறையிலிருந்து பால் வடிவது போல் கனவு கண்டால் என்ன பலன்