Wednesday, December 11, 2013

பெண் குழந்தைகளின் ரிது பலன்

ருது வார பலன் விவரம்
பூப்பெய்துதல் என்னும் புனிதமானத் தமிழ்சொல்லை வடமொழியில் ரிதுசோபனம் என்பர்.  பொதுவாக பெண் குழந்தைகளின் ரிது காலத் தின் பலன்கள் நாம் அறிந்து கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.  ஒரு குழந்தை  வாழ்க்கைப் பயணத்தின் முதல் பத்துமாதங்களுக்கும், அவரவரின் தாயின் கர்ப்பபை மற்றும் சினைப்பைகளின் பணிகள் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்  என்பதை அனைவரும் அறிவர்.  அதன் படி, அந்த பாக்கியத்தினைத் தருகின்ற முதல் முதல் நிகழ்ச்சியாகிய ரிதுவாதலின் பலன்கள் சற்று அறிவோமா!..
வாரங்களில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி நாட்களில் முறையே, பதிவிரதை, நல்ல சம்பத்துக்கள், பொருள் சேர்க்கை மற்றும் ஆரோக்கியம் எனப் பலன் கொள்ளலாம்.   ஞாயிறு அன்று ருதுவானால் புத்திர பாக்கியத் தடைகள் இருக்கும். 
செவ்வாய், சனி நாட்களில் ருதுவாதல் கெடுபலன்கள் தரும்.  அதற்கு உரிய எளிய பரிகாரங்கள் செய்து கொள்ள உத்தமம்.

ருது வார பலன்கள் போல ருது நட்சதிர மற்றும் ருது சமய பலன்கள் வரும் நாட்களில் எழுதுகிறோம். 

குறிப்பு:  தற்போது நடைபெறும் கார்த்திகை, மார்கழி, மற்றும் தை மாதங்களில் பூப்படைதல் முன்பனி, பின்பனி காலங்களில் அதிகளவு நடைபெறும் என்பதால், உரியவர்கள் அக்காலத்தைக் கணித்து நடப்பது சிறந்தது.
JOTHIDA THAMBATHI.  

No comments: